67/13. திருக்குருகாவூர். (திருக்கடாவூர்).
குருகா வூருறை குணமே போற்றி.
அருள்மிகு நீலோத்பல விசாலாட்சி உடனுறை சுவேதரிஷபேஸ்வரர் திருக்கோயில். சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயிளுக்குச் செல்லும் வழியில் 6 வது கி.மீ.ல் வடகால் என்னும் ஊரில் குருகாவூருக்கு சாலை பிரிகிறது. அதில் 1 கி.மீ. பயணிக்க வேண்டும். சுந்தரருக்கு, இறைவன் கட்டமுதும், நீரும் தந்தருள்செய்து, பசி போக்கிய தலம். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.
காழியுள் மேய கடலே போற்றி.
அருள்மிகு பெரியநாயகி உடனுறை பிரமபுரீஸ்வரர் திருக்கோயில். சிதம்பரத்தையடுத்துள்ள தலம். திருஞானசம்பந்தரின் அவதாரப் பதி. ஞானப் பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம். முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் வழிபட்ட தலம். இங்கு மூன்று இறைவன் திருமேனிகள். அடிப்பாகத்திலுள்ள (மூலவர்) பிரமபுரீஸ்வரர் - பிரமன் பூசித்தது.- லிங்க வடிவம். இடைப்பாகத்திலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குருவடிவம். மேல்
பாகத்திலுள்ள சட்டைநாதர் சங்கம வடிவம். மூவர் பாடல் பெற்ற தலம்.
பாகத்திலுள்ள சட்டைநாதர் சங்கம வடிவம். மூவர் பாடல் பெற்ற தலம்.