Wednesday, September 8, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

.
56/2. திருவேட்களம்.
வேட்கள நன்னகர் மேயாய் போற்றி.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது.
அருள்மிகு சர்குணாம்பாள் உடனுறை பசுபதேச்வரர் திருக்கோயில். அர்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம். நாரதர் வழிபட்ட பதி. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
57/3. திருநெல்வாயில். (சிவபுரி).
நெல்வா யில்வளர் நிதியே போற்றி.
சிதம்பரக் - பெரம்பட்டு சாலையில் 3 கி.மீ செல்லவேண்டும். 
அருள்மிகு கனகாம்பிகை உடனுறை உச்சிநாதேஸ்வரர் திருக்கோயில். கண்வ மகரிஷி வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
58/4. திருக்கழிப்பாலை.


கழிப்பா லைஉறை கரும்பே போற்றி.
திருருநேல்வாயிலுக்கு (சிவபுரி) அருகாமையில் (1/2 கி.மீ) உள்ள தலம்.
அருள்மிகு வேதநாயகி உடனுறை பால்வண்ண நாதேஸ்வரர் திருக்கோயில். வால்மீகி முனிவர் வழிபட்ட தலம். மூலவர் பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளார். இங்குள்ள பைரவர் காசியில் உள்ள பைரவரைப் போன்ற தோற்ற முள்ளவர்.மூவர் பாடல் பெற்றது.

No comments:

Post a Comment