Tuesday, September 14, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

61/7. தென்திருமுல்லை வாயில். (திருமுல்லைவாசல்).
தென்திரு முல்லை வாயிலாய் போற்றி.
அருள்மிகு சதானந்த சௌந்தரி உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயில். தலம். சம்பந்தர் பாடல் பெற்றசீர்காழியிலிருந்து 13 கி.மீ. தொலைவு. சோழ மன்னனின் பிரமஹத்தி தோஷம் நீங்கிய து.
62/8. திருக்கலிக்காமூர். (அன்னப்பன் பேட்டை).
கலிக்கா மூர்வளர் கண்ணே போற்றி.
அருள்மிகு சுந்தராம்பாள் உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
திருவெண்காடு - சீர்காழி சாலையில் மங்கைமடம் ஊரையடைந்து, திருநகரி போகும் சாலையில் சென்று,கொனையாம்பட்டினம் என்று வழிகாட்டி உள்ள இடத்தில் திரும்பி, இத்தலலத்தையடயலாம். பராசர முனிவர் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
63/9. திருச்சாய்க்காடு. (சாயாவனம்).

சாய்கா டினிதுறை சதுரா போற்றி.
அருள்மிகு கோஷாம்பாள் உடனுறை சாயாவனேஸ்வரர் திருக்கோயில். சீர்காழி - பூம்புகார் சாலையில் உள்ள தலம். காசிக்குச்சமமாக சொல்லப்படும் ஆறு தலங்களுள் ஒன்று. அவை: 
  1. திருவெண்காடு.
  2. மயிலாடுதுறை.
  3. திருவிடைமருதூர்.
  4. திருவையாறு. 
  5. ஸ்ரீ வாஞ்சியம்.
  6. திருச்சாய்க்காடு.
உபமன்யு முனிவர்,இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார், ஆகியோர் வழிபட்ட தலம். வில்லேந்திய வேலவர் மூர்த்தம் அவசியம் தரிசிக்க வேண்டும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

No comments:

Post a Comment